Search This Blog

Tuesday, August 11, 2009

தாமரை

தாமரை தண்ணீரில் வளரும் மலர். இது ரோஸ் நிறத்தில் இருக்கும். இதன் இலைகள் அகலமாக இருக்கும். இலையின் மேல் தண்ணீர் துளிகள், கண்ணாடி குண்டுகள் போல பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

இதை யாரும் தலையில் சூடுவதில்லை. பலங்கால கோயில்கள் பலவற்றிலும் தாமரை தடாகங்கள் பார்க்கலாம்.

-சுமஜ்லா.

கனகாம்பரம்

கனகாம்பரம், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். இது மணமற்ற மலர். பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

கனகம் என்றால் தங்கம் என்று அர்த்தம். இது தங்கத்தின் நிறத்தை ஒத்து இருப்பதால், இதை கனகாம்பரம் என்கிறோம்.

-சுமஜ்லா.

முல்லை

முல்லை, கொடியாக வளரும். பந்தலிலே படரும். ஊசிமுல்லை மிகவும் வாசமாக இருக்கும்.

அந்தக்கால பாரிவள்ளல் கதையிலிருந்து இந்த கால பாடல்கள் வரை முல்லையின் சிறப்பை கூறாதவர்களே இல்லை.

-சுமஜ்லா.

மல்லிகை

மல்லிகை வெண்மை நிற மலர். அதற்கு ஆங்கிலத்தில் ‘Jasmine' என்பர். இதை தமிழர்கள் பிரியமாக நூலில் தொடுத்து, தம் தலையில் சூடிக் கொள்வர்.

மல்லிகையை மாலையாகவும் தொடுப்பர். இதை மங்களகரமான விசேஷங்களில் அணிவார்கள்.

-சுமஜ்லா